வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மினி பஸ் வசதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மீண்டும் மினி பஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சக்திவேல், வெண்ணந்தூர்.