செய்துங்கநல்லூர் அருகே மேலநாட்டார்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் பயணிகள் நிழற்கூடமும், அமர்வதற்கு இருக்கைகளோ இல்லை. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. எனவே அங்கு இருக்கைகள் மற்றும் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.