புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள பெருங்குடிப்பட்டி, இலுப்பக்குடிப்பட்டி, மேட்டுச்சலை வழியாக இயக்கப்பட்ட பஸ் தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் இலுப்பக்குடிப்பட்டி, பெருங்குடிப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற மக்கள் கீரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.