சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் சிறு,சிறு விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.