சிவகங்கை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் காலை பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள்,,பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வருவாார்களா?