போக்குவரத்து நெரிசல்

Update: 2025-10-12 10:33 GMT

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகாலனி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தாமதமாக நடக்கிறது. மேலும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் உக்கடம், காந்திபுரத்தில் இருந்து துடியலூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் சிவானந்தா காலனி புதுப்பாலம் வழியாக கண்ணப்ப நகர் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைகின்றன. இதனால் கண்ணப்ப நகர் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பால பணியை விரைவுபடுத்தவும், வாகன போக்குவரத்தை முறைப்படுத்தவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்