பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி செல்லும் சாலை வழியாக செல்லும் மினி பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் நினைத்த இடங்களில் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.