பயணிகள் நிழற்குடை வசதி

Update: 2025-09-21 14:54 GMT

ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள செங்கோடம்பள்ளம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் வெயில் காலங்களில் பயணிகள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை பெய்யும் போது ஓதுங்க வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே செங்கோடம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்