பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2025-09-21 11:18 GMT

காங்கயம் பழைய கோட்டை சாலையில் அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. தற்போது அய்யாசாமி நகர் காலனி நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் கடந்து செல்கின்றன. இதனால் வெகு நேரம் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைந்து, காங்கயம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். எனவே அய்யாசாமி நகர் காலனி பிரிவில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்