பஸ்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-09-07 14:20 GMT

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகரின் மிக அருகில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிற்கின்றன. இந்த நாட்களில் அரசு, தனியார் பஸ்கள் செல்வதற்கு என்று தனியாக வழி ஏற்படுத்தப்படுவதிலலை. இதனால் அந்த வாகனங்களும் மற்ற கார்கள், சரக்கு வாகனங்கள் செல்லும் பாதையிலேயே மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் 80 முதல் 90 பயணிகள் வரையில் ஒரு பஸ்சில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் ஒரு மணி நேரம் சுங்கச்சாவடியில் காத்து கிடக்கும் பஸ்சிலேயே இருக்கும் நிலை உள்ளது. ஆகவே பஸ்களுக்கு என்று தனியாக சுங்கச்சாவடியில் பாதை அமைத்து விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஓசூர்.

மேலும் செய்திகள்