போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-31 13:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூர் ரெயில்வே மேம்பாலத்தில் தினமும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இந்த மேம்பாலத்தில் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் அவதிபடுகின்றனர். மேலும் இப்பகுதியில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்