கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளைம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.