கம்பம் பழைய தபால் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் தபால் அலுவலகம், அங்குள்ள ஓட்டல்களுக்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சாலையில் நிற்கும் அவல நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தை மறைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.