ஏரியூரில் வியாழக்கிழமை தோறும் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. அந்த வார சந்தை நடைபெறும் இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் அமைத்துவிட்டு, புதியதாக அரசு ஆஸ்பத்திரி அருகே வாரச்சந்தைக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் கடைக்காரர்கள் கடையை நடத்தாமல், அந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்திலேயே இரு புறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-மணி, ஏரியூர்.