நடுவீரப்பட்டு அடுத்த மேற்கு ராமாபுரத்தில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள இங்கு வேகத்தடையோ அல்லது எச்சரிக்கை பலகையோ ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டியது அவசியமாகும்.