தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் பிரிவு சாலை பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் மேற்கூரைகள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அங்கு பஸ்சுக்காக காத்திருக்க பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.