அந்தியூர்- கோபி மார்க்கமாக காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த டவுன் பஸ் 9 மணிக்கு கோபி மார்க்கமாக செல்கிறது. அதற்கு முன்னதாக வகுப்புகள் தொடங்கிவிடுவதால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை 8.10 மணிக்கு அரசு டவுன் பஸ்சை கோபி மார்க்கமாக இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.