சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவின் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுத்ததில் உள்ள இருக்கைகள் மிகவும் சேதமடைந்து மக்களால் பயன்படுத்த முடியாதவாறு உள்ளது. இதனால் பயணிகள் உட்கார முடியாமல் நின்றபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இருக்கைகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.