வண்டிப்பாளையம் அடுத்த வடுகப்பாளையத்தில் சாலையில் இரவு நேரத்தில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. எனவே உயிாிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.