பண்ருட்டி பேருந்து நிலையத்திற்குள் பெரும்பாலான பஸ்கள் சென்று வராமல், அவைகள் நான்குமுனை சந்திப்பிலேயே நின்று செல்கின்றன. இதனால் பண்ருட்டி பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.