கொடைக்கானலில் இருந்து வில்பட்டி, பள்ளங்கி பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பள்ளங்கி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.