புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள பிராத சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றனர். எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் பாலம் உள்ளதால் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.