பஸ் வசதி வேண்டும்

Update: 2025-06-29 12:48 GMT

பட்டுக்கோட்டை பாளமுத்தி சாந்தாங்காடு கிராமத்துக்கு முறையான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பஸ் வசதி இல்லாமல் தவிப்புக்குள்ளாகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மற்றும் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ் வசதி முழுமையாக இல்லாமல் இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்