அடிப்படை வசதி இல்லை

Update: 2025-06-29 12:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், புழல் மகாவீர் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் இரவில் வேலைக்கு சென்றுவரும் பெண்கள், பெரியவர்கள் அச்சத்துடனே வரும் நிலை காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் சேறும் சகதியும் ஆகி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.




மேலும் செய்திகள்