கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-06-22 15:33 GMT

ராசிபுரம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமானவர்கள் சேலம், கரூர், மதுரை, திருச்சி, கோவை போன்ற பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரங்களில் நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கு நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆண்டகளூர் கேட்டில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், ராசிபுரம்

மேலும் செய்திகள்