திருவள்ளூர் மாவட்டம், மணலி பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்செழியன் சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சில நாட்களுக்கு முன்பு சிமென்ட் சாலை போடும் பணி நடைபெற்றது. அது முழுவதும் போடாமல் பாதி சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையின் வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பல விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலை முழுவதும் போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.