திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் உள்ள கவரப்பாளையம், சேக்காடு, இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து செங்குன்றம் சென்றுவர நேரடி பஸ் வசதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆவடியில் இருந்து பட்டாபிராம் வழியாக செங்குன்றத்துக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டால் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல முடியும். எனவே, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.