பயணிகள் நிழலகம் தேவை

Update: 2025-06-22 10:56 GMT

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் பஸ் நிறுத்தம், நாகை செல்லும் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழலகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் பஸ்சுக்காக மழையிலும், வெயிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பயணிகள் நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்