டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2025-06-15 17:38 GMT

ராசிபுரத்தில் இருந்து எண் 2 கொண்ட டவுன் பஸ் நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கல்குறிச்சி வழியாக பேளுக்குறிச்சி சென்றது. இதில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் உள்பட அனைவரும் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இதனை பரிசீலித்து ராசிபுரத்தில் இருந்து பேளுக்குறிச்சி வரை டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

-ராம், நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்