பேரிகார்டுகளால் விபத்து அபாயம்

Update: 2025-06-15 13:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து நாகுடி வழியாக கண்டிச்சாங்காடு-கட்டுமாவடிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளில் ஆங்காங்கே பேரிக்கார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன ஓட்டிகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் அமைக்கப்படவில்லை. இதனால் கவனக்குறைவாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்து நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்