கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-06-15 12:13 GMT

கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் ரெயில்வே பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இடிகரை, கோவில்பாளையம் செல்லும் அனைத்தும் பஸ்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு உள்ளன. தற்போது 4 பஸ்கள் மட்டுமே அந்த பகுதிக்கு வந்து செல்கிறது. அங்கு அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் நேரங்களில் பஸ்கள் வருவது இல்லை. இதனால் நீண்ட தூரம் நடந்து மேட்டுப்பாளையம் சாலைக்கு வர வேண்டி உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். அல்லது, பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் நேரங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்