காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் தொழிற்பூங்காவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு பணிபுரியும் ஏராளமானோா் பஸ் மூலம் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் காலை முதல் மாலை வரையில் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏராளமானோர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, காஞ்சீபுரம் முதல் ஒரகடம் வரையில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.