பஸ் வசதி வேண்டும்

Update: 2025-06-08 17:47 GMT

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவுரியூர் பஸ் நிறுத்தம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சவுரியூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் வழியிலும் ஆடையூர் செல்லும் வழியிலும் அரசு பஸ்கள் போதுமான அளவு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்களை முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், சேலம்.

மேலும் செய்திகள்