புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டை ஒன்றியம் பெரிச்சுவண்ணியம்பட்டி வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தார்சாலை போட்டு 3 ஆண்டுகள் ஆகாத நிலையில் பல்வேறு இடங்களில் தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.