விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-06-08 09:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, சந்தைப்பேட்டை, கண்ணகி தெரு மற்றும் பதிவுத்துறை அலுவலகம், மேல சுண்ணாம்புக்கார தெரு செல்லும் இணைப்பு சாலையின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை விட உயரமாக உள்ள பாலத்தில் வாகனங்கள் எளிதில் ஏறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்