திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பைபாஸ் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியின் சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி அங்கு உள்ள பிளாஸ்டிக் குப்பைகளுடன் கலந்து குப்பைகூடமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.