சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் சிலர் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாவதுடன், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், பயணிகளின் வருகை அதிகரிப்பதால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுப்பார்களா?