கள்ளக்குறிச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.