கோவிலூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் அரசு பஸ்கள் மின்நகர் சென்று திரும்பி வருகின்றன. அப்போது பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பொதுமக்களை முறையாக ஏற்றி செல்வது இல்லை. இதனால் ஏமாற்றம் அடையும் மாணவர்கள் தனியார் பஸ்களில் செல்லும் நிலை உள்ளது. எனவே அரசு பஸ்களில் அனைத்து பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.