சாலை ஆக்கிரமிப்பு

Update: 2025-05-11 17:22 GMT

புதுச்சேரி ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காராமணிக்குப்பம் சாலையில் தற்போது அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என பல்வேறு வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்