சிவகங்கை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சத்துடனே பயணிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பகுதியில் அதிவேகத்தில் செல்லும் வாகனஓட்டிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.