கள்ளக்குறிச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்க செல்ல பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.