புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட உள்ளதால் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பஸ்கள் சென்று வர சாலைகள் போடவில்லை. இதனால் கடுமையான தூசிகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பயணிகள் அமருவதற்கு போதிய வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். டவுன் பஸ்சுக்கு செல்ல கூடிய பயணிகள் நிழலுக்கு ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் வெட்ட வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.