ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. மேலும் சிறு, சிறு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையில் அதிவேகத்தில் செல்பவர்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் முன்வருவார்களா?