உளுந்தூர்பேட்டை அடுத்த பின்னல்வாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அலங்கிரி கிராமத்தில் இருந்து காலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கால்கடுக்க நடந்து செல்கின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.