திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், அடுத்த கவுண்டர்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக உள்ள பஸ் நிறுத்தம் மிகவும் சேதமடைந்து, யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் பஸ்சுக்காக பயணிகள் வெயிலில் காத்திருக்கு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் பழைய பஸ் நிறுத்தத்தை அகற்றிவிட்டு, புதிய நிறுத்தத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.