ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சிறு, சிறு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையில் அதிவேகத்தில் செல்பவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.