புதுச்சேரி - கடலூர் சாலையில் முதலியார்பேட்டை பகுதியில் சாலையோரம் சரக்கு ஆட்டோக்களில் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க பொதுமக்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்து அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.