இரவு நேர பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2025-03-23 13:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை ,ஆலங்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஆகிய ஊர்களுக்கு வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு 8 மணிக்கு பின்னர் இயக்கப்படுவது இல்லை. இதனால் பலரும் பஸ் வசதி இன்றி சிரமப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி வழித்தடத்தில் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்