ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2025-03-09 16:34 GMT

உத்தமபாளையம் பைபாஸ் சாலை, கிராம சாவடி, கோம்பை செல்லும் கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் சாலை சுருங்கி விட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்